إِنَّ اللَّهَ يَعجَبُ مِنَ الشّابِّ لَيسَت لَهُ صَبوَةٌ.
قالَ أَبِي : إنما هو موقوفًا.
1843. இப்னு அபூஹாதிம் கூறுகிறார்:
நான் எனது தந்தை அபூஹாதிம் அவர்களிடம், ஹிஷாம் பின் அம்மார் அவர்கள், இப்னு லஹீஆ —> அபூஉஷ்ஷானா —> உக்பா பின் ஆமிர் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் கீழ்க்கண்ட செய்தி குறித்துக் கேட்டேன்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆசைகளிலும், பாவங்களிலும் நாட்டம் இல்லாத ஒரு இளைஞனைப் பார்த்து அல்லாஹ் வியப்படைகிறான்.
அதற்கு எனது தந்தை, இது நபித்தோழரின் சொல்லாகவே வந்துள்ளது என்று கூறினார்.