🔗

alilal-ibn-abi-hatim-483: 483

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أنَّ رسُول اللهِ صلى الله عليه وسلم صلّى على جِنازةٍ فكبّر عليها أربعًا ، ثُمّ أتى قبر الميِّتِ فحثا عليهِ مِن قِبلِ رأسِهِ ثلاثًا.
قال أبِي : هذا حدِيثٌ باطِلٌ.


483. அபூமுஹம்மத்-இப்னு அபூஹாதிம் கூறுகிறார்:

எனது தந்தை அவர்கள் கீழ்கண்ட செய்தியை அறிவித்து இது தவறானது என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவுக்குத் தொழுகை நடத்தினார்கள். பின்னர் அடக்கத்தலம் வந்து அவரது தலைமாட்டில் மூன்று கைப்பிடி மண் அள்ளிப் போட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)