🔗

almujam-alawsat-3541: 3541

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

شَكَوْنَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّمْضَاءَ فَلَمْ يُشْكِنَا وَقَالَ: «أَكْثِرُوا مِنْ قَوْلِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، فَإِنَّهَا تَدْفَعُ تِسْعَةً وَتِسْعِينَ بَابًا مِنَ الضُّرِّ، أَدْنَاهَا الْهَمُّ»


3541. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்  (லுஹ்ர் தொழுகைக்கு வரும் நேரத்தில்) கடுமையான வெயிலை தாங்கமுடியவில்லை என்று முறையிட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேறு பதிலை அளிக்காமல், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் (பொருள் : அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகிச் செல்லவோ (நல்லறங்கள்) புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் முடியாது) என்பதை அதிகமாக கூறுங்கள்.

இந்த பிரார்த்தனை தொண்ணூற்று ஒன்பது வகையான கஷ்டங்களை நீக்கும். அவற்றில் குறைந்த பட்சம்  கவலை என்னும் கஷ்டமாகும்.