🔗

almujam-alawsat-3641: 3641

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«مَرَّ رَجُلٌ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَبُولُ، فَسَلَّمَ عَلَيْهِ، فَلَمْ يَرُدَّ عَلَيْهِ، فَلَمَّا فَرَغَ ضَرَبَ بِكَفَّيْهِ فَتَيَمَّمَ، ثُمَّ رَدَّ عَلَيْهِ السَّلَامَ»


பாடம்:

ஸலாமா என்ற பெயருடையவர்களின் அறிவிப்புகள்.

3641. நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தபோது அவர்களைக் கடந்து சென்ற மனிதர் ஒருவர், அவர்களுக்கு ஸலாம் சொன்னார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் பதில் ஸலாம் சொல்லவில்லை. சிறுநீர் கழித்தப் பின் நபி (ஸல்) அவர்கள் (தமது இருகைகளையும் தரையில் அடித்து தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும் தடவி) தயம்மும் செய்த பின்னர் அவரின் ஸலாமுக்கு பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)