🔗

almujam-alawsat-3828: 3828

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

أَرَادَهُ عُثْمَانُ عَلَى الْقَضَاءِ فَأَبَى، وَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الْقُضَاةُ ثَلَاثَةٌ، وَاحِدٌ نَاجٍ، وَاثْنَانِ فِي النَّارِ: مَنْ قَضَى بِالْجَوْرِ أَوْ بِالْهَوَى هَلَكَ، وَمَنْ قَضَى بِالْحَقِّ نَجَا»


3828. அம்ர் பின் தீனார் கூறியதாவது:

உஸ்மான் (ரலி) அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களிடம், மக்களுக்கு தீர்ப்பளிக்கும் நீதிபதி பதவியை (பொறுப்பை) ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறி(வற்புறுத்தி)னார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் அதை மறுத்து, “நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். ஒருவர் தப்பித்துவிடுவார். இருவர் நரகத்தில் நுழைவர். மனோஇச்சைப்படி தீர்ப்பளிப்பவரும், அநியாயமாக தீர்ப்பளிப்பவரும் அழிந்து நாசமாகிவிடுவர். நீதமாக தீர்ப்பளிப்பவர் தப்பித்துவிடுவார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.