أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَنَبِيًّا كَانَ آدَمُ؟ قَالَ: «نَعَمْ» . قَالَ: كَمْ بَيْنَهُ وَبَيْنَ نُوحٍ؟ قَالَ: «عَشَرَةُ قُرُونٍ» . قَالَ: كَمْ بَيْنَ نُوحٍ وَإِبْرَاهِيمَ؟ قَالَ: «عَشَرَةُ قُرُونٍ» . قَالَ: يَا رَسُولَ اللَّهِ، كَمْ كَانَتِ الرُّسُلُ؟ قَالَ: «ثَلَاثُمَائةٍ وَخَمْسَةَ عَشَرَ»
403. ஒரு மனிதர் (நபி-ஸல் அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! ஆதம் (அலை) அவர்கள் நபியா? என்று கேட்டார். அதற்கவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள்.
அந்த மனிதர், “ஆதம் நபிக்கும், நூஹ் நபிக்கும்…இடைப்பட்ட காலம் எவ்வளவு? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 10 தலைமுறை என்று கூறினார்கள். அந்த மனிதர், நூஹ் நபிக்கும், இப்ராஹீம் நபிக்கும் இடைப்பட்ட காலம் எவ்வளவு? என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் 10 தலைமுறை என்று கூறினார்கள்.
மேலும் அந்த மனிதர், ரஸூல்மார்கள் எத்தனை பேர்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “315 பேர்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)