🔗

almujam-alawsat-5087: 5087

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«طَهِّرُوا هَذِهِ الْأَجْسَادَ طَهَّرَكُمُ اللَّهُ، فَإِنَّهُ لَيْسَ مِنْ عَبْدٍ يَبِيتُ طَاهِرًا إِلَّا بَاتَ مَعَهُ فِي شِعَارِهِ مَلَكٌ، لَا يَنْقَلِبُ سَاعَةً مِنَ اللَّيْلِ إِلَّا قَالَ: اللَّهُمَّ اغْفِرْ لِعَبْدِكَ فَإِنَّهُ بَاتَ طَاهِرًا»


5087. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்த உடலை தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களை தூய்மைப் படுத்துவான். யார் உளூவுடன் இரவில் தூங்குகிறாரோ அவரின் ரோமக்கால்களில் ஒரு வானவர் இரவைக் கழிக்கிறார். மேலும், அவர் இரவில் (படுக்கையில்) புரளும் நேரமெல்லாம், அல்லாஹ்வே! இவர் இரவில் உளூவுடன் இருப்பது போன்று, நீயும் உனது (இந்த) அடியாரை (பாவமென்னும் அசுத்தத்தை) விட்டு மன்னிப்பாயாக! என்று அந்த வானவர் பிரார்த்தனை செய்கிறார்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)