بَيْنَا أَنَا فِي حَائِطٍ مِنْ حِيطَانِ الْمَدِينَةِ إِذْ بَصُرْتُ بِامْرَأَةٍ، فَلَمْ يَكُنْ لِي هَمٌّ غَيْرُهَا حَتَّى جَازَتْنِي، ثُمَّ أَتْبَعْتُهَا بَصَرِي، حَتَّى حَازَيْتُ الْحَائِطَ، فَالْتَفَتُّ فَأَصَابَ وَجْهِيَ وَأَدْمَانِي، فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: هَلَكَتُ. فَقَالَ: «وَمَا ذَاكَ يَا أَبَا تَمِيمَةَ؟» فَأَخْبَرْتُهُ فَقَالَ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ إِذَا أَرَادَ بِعَبْدٍ خَيْرًا عَجَّلَ لَهُ عُقُوبَةَ ذَنْبِهِ فِي الدُّنْيَا، وَرَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى أَكْرَمُ مِنْ أَنْ يُعَاقِبَ بِذَنْبٍ مَرَّتَيْنِ»
5315. அபூ தமீமா அல்ஹுஜமிய்யி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஊரின் சுவர்கள் உள்ள பகுதியில் இருந்தேன். அப்போது திடீரென ஒரு பெண்ணைப் பார்த்தேன். அந்தப் பெண்ணைத் தவிர வேறு சிந்தனை அப்போது எனக்கு இல்லை. அவள் என்னைக் கடந்துச் சென்றாள். நான் அவளையே பார்த்துக் கொண்டு சென்று சுவற்றில் மோதிக்கொண்டேன். அந்த நிலையில் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, நான் அழிந்து விட்டேன் என்றுக் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், என்ன விசயம் அபூதமீமாவே! என்று கேட்டார்கள். நான் நடந்ததைக் கூறினேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் “ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய அல்லாஹ் நாடினால் இவ்வுலகிலேயே அவரின் பாவத்திற்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். நமது இறைவன் ஒரு பாவத்திற்கு இருதடவை தண்டிக்காத கண்ணியமிக்கவன் ஆவான் என்று கூறினார்கள்.