كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا صَلَّى الْفَجْرَ لَمْ يَقُمْ مِنْ مَجْلِسِهِ حَتَّى تُمْكِنَهُ الصَّلَاةُ» ، وَقَالَ: «مَنْ صَلَّى الصُّبْحَ، ثُمَّ جَلَسَ فِي مَجْلِسِهِ حَتَّى تُمْكِنَهُ الصَّلَاةُ، كَانَتْ بِمَنْزِلَةِ عَمْرَةٍ وَحَجَّةٍ مُتَقَبَّلَتَيْنِ»
5602. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஃபஜ்ர் தொழுகையை தொழுதுவிட்டால் மீண்டும் (உபரியான தொழுகையை) தொழ இயலும்வரை அந்த இடத்திலிருந்து எழமாட்டார்கள்.
மேலும் அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், ஃபஜ்ர் தொழுகையை தொழுதுவிட்டு மீண்டும் (உபரியான தொழுகையை) தொழ இயலும்வரை அந்த இடத்திலேயே அமர்ந்திருப்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜும், உம்ராவும் செய்வதற்கு சமமானதாகும்.
தப்ரானீ இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தியை மாலிக் பின் மிஃக்வல் அவர்களிடமிருந்து ஃபள்ல் பின் முவஃப்பக் என்பவர் மட்டுமே (தனித்து) அறிவித்துள்ளார்.