«الْمُؤْمِنُ يَأْلَفُ وَيُؤْلَفُ، وَلَا خَيْرَ فِيمَنْ لَا يَأْلَفُ، وَلَا يُؤْلَفُ، وَخَيْرُ النَّاسِ أَنْفَعُهُمْ لِلنَّاسِ»
5787. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு இறைநம்பிக்கையாளர் பிறருடன் பழகக்கூடியவராகவும், பிறர் அவருடன் பழகக்கூடிய நிலையிலும் இருப்பார். ஒருவர் பிறருடன் பழகாதவராகவும், பிறர் அவருடன் பழகாத நிலையிலும் அவர் இருந்தால் அவரிடத்தில் எந்த நன்மையும் இல்லை.
மக்களில் சிறந்தவர், மக்களுக்கு அதிகம் பயன்தரக்கூடியவரே ஆவார்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
தப்ரானீ இமாம் கூறுகிறார்:
இந்த ஹதீஸை இப்னு ஜுரைஜ் அவர்களிடமிருந்து அப்துல்மலிக் பின் அபூகரீமா என்பவர் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார். மேலும் இவரிடமிருந்து அலீ பின் பஹ்ராம் என்பவர் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார்.