🔗

almujam-alawsat-6757: 6757

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

«الْقُضَاةُ ثَلَاثَةٌ، اثْنَانِ فِي النَّارِ وَوَاحِدٌ فِي الْجَنَّةِ، رَجُلٌ قَعَدَ لِلنَّاسِ فَقَضَى بَيْنَهُمْ، وَلَا عِلْمَ لَهُ بِالْقَضَاءِ، فَأَهْلَكَ حُقُوقَهُمْ، وَرَجُلٌ عَلِمَ فَجَارَ وَهُوَ يَعْلَمُ، وَرَجُلٌ عَلِمَ فَقَضَى بِعِلْمِهِ بِالْحَقِّ فَهَذَا فِي الْجَنَّةِ»


6757. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் புகுவர்.

  1. தீர்ப்பின் சட்டங்களை அறிந்துக்கொள்ளாமல் நீதிபதி பதவியில் அமர்ந்து மக்களின் உரிமைகளை நாசமாக்கியவர். இவர் நரகத்தில் புகுவார்.
  2. நீதியை அறிந்தும் அதன்படி தீர்ப்பளிக்காமல், தீர்ப்பில் அநீதி செய்தவர். இவர் நரகத்தில் புகுவார்.
  3. நீதியை அறிந்து நியாயமாக தீர்ப்பளிப்பவர். இவர் சுவர்க்கத்தில் புகுவார்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)