«تُعْرَضُ الْأَعْمَالُ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ، فَمِنْ مُسْتَغْفِرٍ فَيُغْفَرُ لَهُ، وَمِنْ تَائِبٍ فَيُتَابُ عَلَيْهِ، وَيُرَدُّ أَهْلُ الضَّغَائِنِ لِضَغَائِنِهِمْ حَتَّى يَتُوبُوا»
7419. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு திங்கள், வியாழக் கிழமைகளில் (அல்லாஹ்விடம் அடியார்களின்) செயல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன.
அப்போது பாவமன்னிப்புக் கேட்பவருக்கு மன்னிப்பு வழங்கப்படும். பாவத்தை நினைத்து மனம் வருந்துபவருக்கு மன்னிப்பு வழங்கப்படும். விரோதம் கொண்டவர்களுக்கு அவர்கள் (விரோதத்திலிருந்து) வெளியேறும் வரை அது அவர்களுக்கு மறுக்கப்பட்டுவிடும்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)