«إِنَّ نَفْسَ الْمُؤْمِنِ تَخْرُجُ رَشْحًا، وَإِنَّ نَفْسَ الْكَافِرِ تَسِيلُ كَمَا تَخْرُجُ نَفْسُ الْحِمَارِ، وَإِنَّ الْمُؤْمِنَ لَيَعْمَلُ الْخَطِيئَةَ فَيُشَدَّدُ بِهَا عَلَيْهِ عِنْدَ الْمَوْتِ لِيُكَفَّرَ بِهَا، وَإِنَّ الْكَافِرَ لَيَعْمَلُ الْحَسَنَةَ فَيُسَهَّلُ عَلَيْهِ عِنْدَ الْمَوْتِ لِيُجْزَى بِهَا»
10015. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளரின் உயிர், வியர்வை வர (இலேசான சிரமத்துடன்) வெளியேறும். இறைமறுப்பாளரின் உயிர், கழுதையின் உயிர் வெளியேறுவதைப் போன்று (இலேசாக) வெளியேறும்.
இறைநம்பிக்கையாளர் செய்த சில தவறுகளை மன்னிப்பதற்காக மரணத்தருவாயில் உயிர் பிரிவது அவருக்கு கடினமாக்கப்படும். இறைமறுப்பாளர் செய்த சில நன்மைகளுக்கு (கூலியாக) மரணத்தருவாயில் உயிர் பிரிவது அவருக்கு இலேசாக்கப்படும்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)