مَا خَرَجَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ بَيْتِي قَطُّ إِلَّا رَفَعَ بَصَرَهُ إِلَى السَّمَاءِ، فَقَالَ: «اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ أَوْ أُضَلَّ، أَوْ أَزِلَّ أَوْ أُزَلَّ، أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلِيَّ، أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ»
11. மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, வானத்தை நோக்கி பார்த்துவிட்டு, “அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க அன் அழில்ல அவ் உழல்ல அவ் அஸில்ல அவ் உஸல்ல அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய அவ் அள்ளிம அவ் உள்லம” என்று கூறாமல் செல்லமாட்டார்கள்.
(பொருள்: அல்லாஹ்வே! நான் பிறரை வழிக்கெடுக்காமலும், பிறரால் வழிக்கெடாமலும்; சறுகச் செய்யாமலும், சறுகி விடாமலும்; மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும்; அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்).