” أَنَّ يَهُودَ كَانُوا يَقُولُونَ هَذِهِ الدُّنْيَا سَبْعَةُ آلَافِ سَنَةٍ، وَإِنَّمَا نُعَذَّبُ لِكُلِّ أَلْفِ سَنَةٍ يَوْمًا فِي النَّارِ وَإِنَّمَا هِي سَبْعَةُ أَيَّامٍ مَعْدُودَاتٌ، فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ فِي ذَلِكَ وَقَالُوا: {لَنْ تَمَسَّنا النَّارُ إِلَّا أَيَّامًا مَعْدُودَةً} [البقرة: 80] إِلَى قَوْلِهِ {فِيهَا خَالِدُونَ} [البقرة: 81] “
11160. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“யூதர்கள், ‘இந்த உலகத்தின் ஆயுட்காலம் 7 ஆயிரம் ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு ஆயிரம் ஆண்டுகளுக்கும் ஈடாக, எங்களுக்கு நரகத்தில் ஒரு நாள் மட்டுமே வேதனை அளிக்கப்படும். எனவே, (மொத்தமாக) குறிப்பிட்ட அந்த ஏழு நாட்கள்தான் (வேதனை அளிக்கப்படும்) என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
இதைப்பற்றியே கண்ணியமிக்கவனும் மகத்துவமிக்கவனுமான அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கினான்:
குறிப்பிட்ட நாட்கள் தவிர நரகம் எங்களைத் தீண்டாது எனவும் அவர்கள் கூறினர். “அல்லாஹ்விடம் (இது பற்றி) ஏதாவது உடன்படிக்கை செய்துள்ளீர்களா? (அவ்வாறு செய்திருந்தால்) அல்லாஹ் தனது உடன்படிக்கையை மீறவே மாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?” என்று கேட்பீராக!
அவ்வாறில்லை! யாராக இருந்தாலும் தீமை செய்து, அவர்களின் குற்றம் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளுமானால் அவர்கள் நரகவாசிகளே. அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
(அல்குர்ஆன்: 2:80,81)