🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 11916

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

مَرَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَجُلٍ وَاضِعٍ رِجْلَهُ عَلَى صَفْحَةِ شَاةٍ، وَهُوَ يَحُدُّ شَفْرَتَهُ، وَهِيَ تَلْحَظُ إِلَيْهِ بِبَصرِها، قَالَ: «أَفَلَا قَبْلَ هَذَا، أَوَ تُرِيدُ أَنْ تُمِيتَهَا مَوْتَتَانِ»


11916. ஒருவர் ஓர் ஆட்டைப் படுக்க வைத்து, அதன் பக்கவாட்டில் தனது காலை வைத்து, தனது கத்தியைக் கூர் தீட்டிக் கொண்டிருந்தார். அந்த ஆடு அவரையே பார்த்துக் கொண்டிருந்தது.

அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரைக் கடந்துச் சென்றார்கள். அதனைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “இதற்கு முன்பே (கத்தியைக் கூர் தீட்டி) வைத்திருக்கக் கூடாதா? இரண்டு முறை அதை மரணிக்கச் செய்ய விரும்புகிறாயா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)