🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 1319

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

أَتَيْتُ الْمَسْجِدَ، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّلَاةِ، فَلَمَّا سَلَّمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، الْتَفَتَ إِلَيَّ، وَأَنَا أُصَلِّي، فَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَنْظُرُ إِلَيَّ، وَأَنَا أُصَلِّي، فَلَمَّا فَرَغْتُ، قَالَ: «أَلَمْ تُصَلِّ مَعَنَا؟» قُلْتُ: نَعَمْ، قَالَ: «فَمَا هَذِهِ الصَّلَاةُ؟» قُلْتُ: يَا رَسُولَ اللهِ رَكْعَتَيِ الْفَجْرِ، خَرَجْتُ مِنْ مَنْزِلِي، وَلَمْ أَكُنْ صَلَّيْتُهُمَا، قَالَ: فَلَمْ يَعِبْ ذَلِكَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيَّ


1319. ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் பள்ளிவாசலுக்கு வந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததும், தொழுதுகொண்டிருந்த என்னை நோக்கித் திரும்பினார்கள். நான் தொழுதுகொண்டிருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் தொழுது முடித்ததும், “எங்களுடன் தொழவில்லையா?” என்று கேட்டார்கள். நான் “ஆம் (உங்களுடன் தொழுதேன்)” என்றேன். “இது என்ன தொழுகை?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! இது ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்துகள். நான் என் வீட்டிலிருந்து புறப்படும்போது அதைத் தொழவில்லை” என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைப் பற்றி என்னைக் கண்டிக்கவில்லை.