أَنَّهُ: دَخَلَ مَعَ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ عَلَى ابْنِ مُطِيعٍ فَقَالَ: السَّلَامُ عَلَيْكَ، فَقَالَ: وَعَلَيْكَ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ، وَمَرْحَبًا وَأَهْلًا بِأَبِي عَبْدِ الرَّحْمَنِ ضَعُوا لَهُ وِسَادَةً، فَقَالَ ابْنُ عُمَرَ: لَوْلَا أَنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” ثَلَاثٌ لَا تُرَدُّ: اللَّبَنُ، وَلَا الْوِسَادَةُ وَلَا الدُّهْنُ ” مَا جَلَسْتُ عَلَيْهَا
13279. முஸ்லிம் பின் ஜுன்துப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான், அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் இப்னு முதீஃ அவர்களிடம் சென்றேன். அப்போது (அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்) “அஸ்ஸலாமு அலைக” (உங்களின் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்) என்று கூறினார்கள். அதற்கு அவர், “வஅலைகஸ்ஸலாமு வ ரஹ்மதுல்லாஹி” (உங்களின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் அருளும் உண்டாகட்டும்) என்று கூறிவிட்டு, “அபூஅப்திர்ரஹ்மானே! வருக, உங்கள் வரவு நல்வரவாகட்டும்! இவருக்கு ஒரு தலையணையைப் போடுங்கள்” என்று கூறினார்.
அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘மூன்று பொருட்கள் திருப்பி அனுப்பப்படக் கூடாதவை: (அவை) பால், தலையணை, வாசனைத் திரவியம்’ என்று கூறுவதை நான் கேட்டிருக்காவிட்டால், நான் இதன் மீது அமர்ந்திருக்க மாட்டேன்” என்று கூறினார்கள்.