🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 13347

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«قَدْ عَلِمْتُ أَنَّ أَحَبَّ الْبِلَادِ إِلَى اللهِ عَزَّ وَجَلَّ مَكَّةُ، وَلَوْلَا أَنَّ قَوْمِي أَخْرَجُونِي مَا خَرَجْتُ، اللهُمَّ اجْعَلْ فِي قُلُوبِنَا مِنْ حُبِّ الْمَدِينَةِ مِثْلَ مَا جَعَلْتَ فِي قُلُوبِنَا مِنْ حُبِّ مَكَّةَ» ، وَمَا أَشْرَفَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمَدِينَةِ قَطُّ إِلَّا عُرِفَ فِي وَجْهِهِ الْبِشْرُ وَالْفَرَحُ


13347. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவை நோக்கி) “ பூமியில் இருக்கும் ஊர்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான ஊர் மக்கா என்பதை நான் நன்கறிவேன்.என்னுடைய சமுதாயத்தினர் உன்னை விட்டும் என்னை வெளியேற்றாமலிருந்தால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.)

அல்லாஹ்வே! எங்கள் உள்ளத்தில் மக்கா ஊரின் மீது பாசத்தை ஏற்படுத்தியது போன்று மதீனா ஊரின் மீதும் பாசத்தை ஏற்படுத்துவாயாக என்று (பிரார்த்தித்துக்) கூறினார்கள்.

அவர்கள் மதீனாவை நெருங்கிவரும்போதெல்லாம் அவர்களின் முகத்தில் சந்தோசமும், மகிழ்ச்சியும் தென்படும்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)