«أَكْثِرُوا مِنْ غَرْسِ الْجَنَّةِ فَإِنَّهُ عَذْبٌ مَاؤُهَا طَيِّبٌ تُرَابُهَا، فَأَكْثِرُوا مِنْ غِرَاسِهَا، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ»
13354. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் அதிகமான மரங்களை நட்டுக் கொள்ளுங்கள். ஏனேனில் அதன் தண்ணீர் சுவையானது; அதன் மண் தூய்மையானது. எனவே சொர்க்கத்தில் அதிக மரத்தை நடுவதற்கு “லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்” என்பதை அதிகமாகக் கூறிக்கொள்ளுங்கள்.
(பொருள்: அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் இயலாது என்று கூறுவது)
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)