🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 13435

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

” مَنْ قَالَ: سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ، كُتِبَتْ لَهُ بِكُلِّ حَرْفٍ عَشْرُ حَسَنَاتٍ، وَمَنْ أَعَانَ فِي خُصُومَةِ بَاطِلٍ لَمْ يَزَلْ فِي سَخَطِ اللهِ حَتَّى يَنْزِعَ، وَمَنْ حَالَتْ شَفَاعَتُهُ دُونَ حَدٍّ مِنْ حُدُودِ اللهِ فَقَدْ ضَادَّ اللهَ فِي أَمْرِهِ، وَمَنْ بَهَتَ مُؤْمِنًا أَوْ مُؤْمِنَةً حَبَسَهُ اللهُ فِي رَدْغَةِ الْخَبَالِ يَوْمَ الْقِيَامَةِ، حَتَّى يَخْرُجَ مِمَّا قَالَ وَلَيْسَ بِخَارِجٍ “


13435. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் “ஸுப்ஹானல்லாஹ், வல்ஹம்துலில்லாஹ், வலா இலாஹ இல்லல்லாஹ், வல்லாஹு அக்பர்” என்று அல்லாஹ்வைத் துதிக்கிறாரோ, அவர் சொல்லும் ஒவ்வொரு எழுத்துக்கும் பகரமாக பத்து நன்மைகள் எழுதப்படுகின்றன.

ஒரு அநீதியான வழக்கோ அல்லது சண்டையோ என்று தெரிந்தே அதற்கு யாராவது உதவி செய்தால், அவர் அந்தச் செயலை விட்டு விலகும் வரை அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிறார்.

அல்லாஹ் விதித்த தண்டனைகளில் ஒன்றிலிருந்து ஒரு குற்றவாளியைத் தப்பிக்க வைக்க யாராவது பரிந்துரை செய்தால், அவர் அல்லாஹ்வின் கட்டளையையே எதிர்த்தவர் ஆவார்.

யார் ஒரு முஃமினான ஆண் அல்லது பெண் மீது, அவரிடம் இல்லாத ஒரு குறையைச் சொல்லி அவதூறு சுமத்துகிறாரோ, அவர் தான் சொன்னதை நிரூபிக்கும் வரை மறுமை நாளில் அல்லாஹ் அவரை ‘ரத்ஃகதுல் கபால்’ (எனும் நரகவாசிகளின் உடலில் இருந்து வழியும் சீழ் மற்றும் அழுக்குகள் நிறைந்த) இடத்தில் சிறை பிடித்து வைப்பான். ஆனால், அவரால் அதை ஒருபோதும் நிரூபிக்க முடியாது.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)