🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 13620

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

طَهِّرُوا هَذِهِ الْأَجْسَادَ طَهَّرَكُمُ اللهُ، فَإِنَّهُ لَيْسَ عَبْدٌ يَبِيتُ طَاهِرًا إِلَّا بَاتَ مَعَهُ مَلَكٌ فِي شِعَارِهِ لَا يَنْقَلِبُ سَاعَةً مِنَ اللَّيْلِ إِلَّا قَالَ: اللهُمَّ اغْفِرْ لِعَبْدِكَ فَإِنَّهُ بَاتَ طَاهِرًا


13620. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்த உடலை தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களை தூய்மைப் படுத்துவான். யார் உளூவுடன் இரவில் தூங்குகிறாரோ அவரின் ரோமக்கால்களில் ஒரு வானவர் இரவைக் கழிக்கிறார். மேலும், அவர் (படுக்கையில்) புரளும் நேரமெல்லாம், அல்லாஹ்வே! உனது (இந்த) அடியாரை மன்னிப்பாயாக! ஏனெனில் இவர் இரவில் உளூவுடன் தூங்கினார் என்று அந்த வானவர் பிரார்த்தனை செய்கிறார்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)