طَهِّرُوا هَذِهِ الْأَجْسَادَ طَهَّرَكُمُ اللهُ. مَا مِنْ عَبْدٍ بَاتَ طَاهِرًا إِلَّا بَاتَ فِي شِعَارِهِ مَلَكٌ كُلَّمَا تَقَلَّبَ مِنَ اللَّيْلِ سَاعَةً قَالَ: الْمَلَكُ: اللهُمَّ اغْفِرْ لِعَبْدِكَ كَمَا بَاتَ طَاهِرًا
13621. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த உடலை தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களை தூய்மைப் படுத்துவான். யார் உளூவுடன் இரவில் தூங்குகிறாரோ அவரின் ரோமக்கால்களில் ஒரு வானவர் இரவைக் கழிக்கிறார். மேலும், அவர் இரவில் (படுக்கையில்) புரளும் நேரமெல்லாம், அல்லாஹ்வே! இவர் இரவில் உளூவுடன் இருப்பது போன்று, நீயும் உனது (இந்த) அடியாரை (பாவமென்னும் அசுத்தத்தை) விட்டுமன்னிப்பாயாக! என்று அந்த வானவர் பிரார்த்தனை செய்கிறார்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)