🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 13801

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

القضاة ثلاثة قاضيان في النار وقاض في الجنة قاضي قضى بالهوى فهو في النار وقاضي قضى بغير علم فهو في النار وقاضي قضى بالحق فهو في الجنة


13801. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் நுழைவர்.

  1. மனோஇச்சைப்படி (சுயலாபத்திற்கு) தீர்ப்பளிப்பவர். இவர் நரகத்தில் நுழைவார்.
  2. உண்மையை அறியாமல் தீர்ப்பளிப்பவர். இவர் நரகத்தில் நுழைவார்.
  3. உண்மையை அறிந்து அதன்படி தீர்ப்பளிப்பவர். இவர் சுவர்க்கத்தில் நுழைவார்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)