أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي عُنُقِي صَلِيبٌ مِنْ ذَهَبٍ، فَقَالَ: ” يَا عَدِيُّ اطْرَحْ هَذَا الْوَثَنَ مِنْ عُنُقِكَ، فَطَرَحْتُهُ فَانْتَهَيْتُ إِلَيْهِ وَهُوَ يَقْرَأُ سُورَةَ بَرَاءَةَ فَقَرَأَ هَذِهِ الْآيَةَ {اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللهِ} [التوبة: 31] حَتَّى فَرَغَ مِنْهَا، فَقُلْتُ: إنَّا لَسْنَا نَعْبُدُهُمْ، فَقَالَ: «أَلَيْسَ يُحَرِّمُونَ مَا أَحَلَّ اللهُ فَتُحَرِّمُونُهُ، ويُحِلُّونَ مَا حَرَّمَ اللهُ فَتَسْتَحِلُّونَهُ؟» قُلْتُ: بَلَى، قَالَ: «فَتِلْكَ عِبَادَتُهُمْ»
218. என் கழுத்தில் தங்கத்தால் ஆன சிலுவை இருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள், இந்த சிலுவையை எறிந்து விடுங்கள் என்று கூறினார்கள். எனவே நான் அதை எறிந்துவிட்டு வந்தபோது நபி (ஸல்) அவர்கள், பராஅத் (தவ்பா) அத்தியாயத்தின் “அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறுதான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன். (அல்குர்ஆன் 9:31) எனும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
அப்போது நான், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மதபோதகர்களை வணங்கவில்லையே! என்று கூறினேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் (ஹலால் என்று) அனுமதித்ததை அவர்கள் தடைசெய்தபோது அதை நீங்கள் தடை செய்துக் கொண்டீர்கள் அல்லவா?; அல்லாஹ் (ஹராம் என்று) தடுத்ததை அவர்கள் அனுமதித்தபோது அதை நீங்கள் அனுமதிக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டீர்கள் அல்லவா?” என்று என்னிடம் (திருப்பிக்) கேட்டார்கள். அதற்கு நான், “ஆம்” என்று கூற, “இவ்வாறு நீங்கள் செய்தது அவர்களை வணங்கியது (போன்று) தான்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அதீ பின் ஹாதிம் (ரலி)