قُلْتُ: ” يَا رَسُولَ اللهِ، الرَّجُلُ يُحِبُّ قَوْمَهُ، أَعَصِبِيٌّ هُوَ؟ قَالَ: «لَا» قُلْتُ: مَنَ الْعَصَبِيُّ؟ قَالَ: «الَّذِي يُعِينُ قَوْمَهُ عَلَى الظُّلْمِ»
பாடம்:
குஸைலா பின்த் வாஸிலா தனது தந்தையிடமிருந்து அறிவிக்கும் செய்திகள்.
235-2. நான் நபி (ஸல்) அவர்களிடம், ”அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தன் சமூகத்தை நேசிக்கிறார். இவர் இனவெறியரா?” என்று கேட்டேன். அதற்கவர்கள், “இல்லை” என்று பதிலளித்தார்கள். அப்படியென்றால் இனவெறியர் யார்? என்று கேட்டேன்.
அதற்கவர்கள், “தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும் போது அவர்களுக்குத் துணைபுரிபவர் தான் இனவெறியர்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: வாஸிலா பின் அஸ்கஃ (ரலி)