🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 378

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

دَخَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا عَلَى عَائِشَةَ بِنْتِ أَبِي بَكْرٍ وَعِنْدَهَا أُخْتُهَا أَسْمَاءُ، وَعَلَيْهَا ثِيَابٌ سَابِغَةٌ وَاسِعَةُ الْأَكِمَّةِ، فَلَمَّا نَظَرَ إِلَيْهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ فَخَرَجَ، فَقَالَتْ لَهَا عَائِشَةُ: تَنَحَّيْ فَقَدْ رَأَى مِنْكِ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمْرًا كَرِهَهُ، فَفَتَحَتْ فَدَخَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَتْهُ عَائِشَةُ لِمَ قَامَ؟ فَقَالَ: «أَوَ لَمْ تَرَيْ إِلَى هَيَّأَتِهَا، إِنْهُ لَيْسَ لِلْمَرْأَةِ الْمُسْلِمَةِ أَنْ يَبْدُو مِنْهَا إِلَّا هَكَذَا» وَأَخَذَ كُمَّيْهِ فَغَطَّى بِهِمَا ظُهُورَ كَفَّيْهِ حَتَّى لَمْ يَبْدُ مِنْ كَفَّيْهِ إِلَّا أَصَابِعُهُ، ثُمَّ نَصَبَ كَفَّيْهِ عَلَى صُدْغَيْهِ حَتَّى لَمْ يَبْدُ إِلَّا وَجْهُهُ


அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) வழியாக உபைத் பின் ரிஃபாஆவின் அறிவிப்புகள்

378. அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களிடம் அவரின் தங்கை அஸ்மா பின்த் அபூபக்ர் (ரலி) அவர்களும் இருந்தார்கள். மேலும் அவர் கைப்பகுதி அகலமான நீண்ட ஆடையை அணிந்திருந்தார். அவரைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியே சென்று விட்டார்கள். உடனே ஆயிஷா (ரலி), அல்லாஹ்வின் தூதர் அவர்கள் வெறுக்கும் ஒரு செயலை உன்னிடம் கண்டுள்ளார்கள். எனவே நீ சென்றுவிடு என்று அஸ்மாவிடம் கூறினார்கள். பின்பு அவர்கள் கதவை திறக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உள்ளே வந்தார்கள். அவர்களிடம், ஆயிஷா (ரலி)  நீங்கள் ஏன் சென்றுவிட்டீர்கள் என்று கேட்க, அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அஸ்மாவின் உடல் அமைப்பை நீ கவனிக்கவில்லையா?  ஒரு பெண் முகத்தையும், இரு முன்கை விரல்களையும் தவிர வேறு எதையும் வெளிப்படுத்தக்கூடாது என்பதை செயலில் செய்து காட்டினார்கள்…