🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 3899

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

قَالَ لِي أَبُو أَيُّوبَ الْأَنْصَارِيُّ: أَلَا أُعَلِّمُكَ كَلِمَةً عَلَّمَنِيهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟، قُلْتُ: بَلَى يَا عَمِّ، قَالَ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ نَزَلَ عَلَيَّ قَالَ: «أَلَا أُعَلِّمُكَ يَا أَبَا أَيُّوبَ كَلِمَةً مِنْ كَنْزِ الْجَنَّةِ؟» ، قُلْتُ: بَلَى يَا رَسُولَ اللهِ، بِأَبِي أَنْتَ وَأُمِّي، قَالَ: «أَكْثِرْ مِنْ قَوْلِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ»


3899. அப்துல்லாஹ் பின் ஸஃத் பின் அபூவக்காஸ் அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு கற்றுத் தந்த ஒரு வார்த்தையை உனக்கும் கற்றுத்தரவா?” என்று அபூஅய்யூப் (ரலி) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான், “ஆம்” கற்றுத்தாருங்கள் எனது தந்தையின் சகோதரரே! என்று கூறினேன். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் (அடைக்கலமாக) தங்க வந்த சமயம், “சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலத்தை உமக்கு கற்றுத்தரட்டுமா?” என்று என்னிடம் கேட்டார்கள். நான், “ஆம்” அல்லாஹ்வின் தூதரே! “என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணம்!  என்று கூறினேன். அப்போது அவர்கள், “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” (அல்லாஹ்வின் உதவியில்லாமல் யுக்தியுமில்லை; சக்தியுமில்லை) என்ற வார்த்தைகளை அதிகமாக கூறுவீராக! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)