🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 3900

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

لَقِيتُ أَبَا أَيُّوبَ، فَقَالَ لِي: أَلَا آمُرُكَ بِمَا أَمَرَنِي بِهِ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ «أَنْ أَكْثِرْ مِنْ قَوْلِ لَا حَوْلَ، وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ فَإِنَّهَا مِنْ كُنُوزِ الْجَنَّةِ»


3900. ஆமிர் பின் ஸஃத் பின் அபூவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூஅய்யூப் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு கட்டளையிட்ட ஒரு செயலை உனக்கும் கட்டளையிடவா? என்று கூறிவிட்டு, அது “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” (அல்லாஹ்வின் உதவியில்லாமல் யுக்தியுமில்லை; சக்தியுமில்லை) என்ற வார்த்தைகளை அதிகமாக கூறுவதாகும். ஏனெனில். அது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலம்“ என்று கூறினார்கள்.