🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 4085

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَرْبَعٌ مِنْ سُنَنِ الْمُرْسَلِينَ: الْحَيَاءُ، وَالتَّعَطُّرُ، وَالنِّكَاحُ، وَالسِّوَاكُ


பாடம்:

அபூஅய்யூப் (ரலி) அவர்களிடமிருந்து அபுஷ்ஷிமால் பின் ளிபாப் என்பவர் அறிவிக்கும் செய்திகள்.

4085. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான்கு காரியங்கள் நபிமார்களின் வழிமுறையைச் சார்ந்தது. அவை

1 . வெட்கம்.

2 . வாசனை திரவியம் பூசுவது.

3 . திருமணம் செய்வது.

4 . மிஸ்வாக் செய்வது (பல் துலக்குவது).

அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)