انْطَلَقْتُ مَعَ أَخِي إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلِيَّ سِوَارَانِ مِنْ ذَهَبٍ، فَقَالَ: «أَيَسُرُّكِ أَنْ يُسَوِّرَكِ اللهُ بِسُوَارَيْنِ مِنْ نَارٍ؟» فَانْتَزَعْتُهُمَا فَرَمَيْتُهُما فَلَا أَدْرِي أَيَّ النَّاسِ أَخَذَهُمَا
409. அஸ்மா பின்த் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது :
ஒரு தடவை நான், எனது சகோதரருடன் நபி (ஸல்) அவர்களைக் காண சென்றேன். அப்போது நான் என்னுடைய இரு கைகளில் இரு தங்க காப்புகளை அணிந்திருந்தேன். நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து மறுமையில் அல்லாஹ், நெருப்பாலான இரு தங்க காப்புகளை உனக்கு அணிவித்து விடுவது உனக்கு மகிழ்ச்சியளிக்குமா? என்று கேட்டார்கள்.
உடனே நான் அவ்விரண்டு தங்க காப்புகளையும் கழற்றி எறிந்து விட்டேன். அவ்விரண்டையும் வேறு யார் எடுத்தார்கள் என்பதும் எனக்கு தெரியாது.