كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَبْصَرَ امْرَأَةً عَلَيْهَا سِوَارَانِ مِنْ ذَهَبٍ، فَقَالَ: «أَيَسُرُّكِ أَنْ يُسَوِّرَكِ اللهُ بِسُوَارَيْنِ مِنْ نَارٍ؟» فَخَلَعَتْهَا مِنْ يَدِهَا فَطَرَحَتْهَا فَلَا أَدْرِي مَنْ أَخَذَهُمَا
415. அஸ்மா பின்த் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது :
ஒரு தடவை நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தபோது இரு தங்க காப்புகள் அணிந்த ஒரு பெண்ணை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அந்தப் பெண்ணைப் பார்த்து, “நெருப்பாலான இரு காப்புகளை நீ அணிந்துக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்குமா? என்று கூறினார்கள்.
உடனே அப்பெண்மணி தனது கைகளிலிருந்து அவ்விரண்டு தங்கக் காப்புகளையும் கழற்றி எறிந்து விட்டார்கள். அவ்விரண்டையும் வேறு யார் எடுத்தார்கள் என்பதும் எனக்கு தெரியாது.