🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 445

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«مَنْ قَالَ سُبْحَانَ اللهِ الْعَظِيمِ بُنِيَ لَهُ غَرْسٌ فِي الْجَنَّةِ،

وَمَنْ قَرَأَ الْقُرْآنَ فَأَحْكَمَهُ وَعَمِلَ بِمَا فِيهِ أَلْبَسَ اللهُ وَالِدَيْهِ يَوْمَ الْقِيَامَةِ تَاجًا ضَوْءُهُ أَحْسَنُ مِنْ هَذَا الْقَمَرِ»


445. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைப் போற்றி துதிக்கிறேன்) என்று சொல்லக் கூடியவருக்கு அவர் புகழ்ந்ததன் காரணமாக சுவனத்தில் அவருக்காக ஒரு மரம் நடப்படும்.

அல்குர்ஆனை ஓதி மனனம் செய்து அதன் படி நடந்தவரின் பெற்றோருக்கு மறுமை நாளில் ஒளியிலான ஒரு கிரீடம் அணிவிக்கப்படும். அதன் பிரகாசம் இந்த (உலகத்தின்) சந்திரனைவிட அழகாக இருக்கும்.

அறிவிப்பவர்: முஆத் பின் அனஸ் (ரலி)