🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 572

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«إِنَّ اللهَ لَا يُعْجِزُ هَذِهِ الْأُمَّةَ مِنْ نِصْفِ يَوْمٍ وَإِذَا رَأَيْتَ الشَّامَ مَائِدَةَ رَجُلٍ وَأَهْلِ بَيْتِهِ فَعِنْدَ ذَلِكَ تُفْتَحُ الْقُسْطَنْطِينِيَّةُ»


572. “(மறுமை நாளின் அளவில்) பாதி நாளை இந்த சமுதாயம் கடந்துவிடுவதை அல்லாஹ் இயலாததாக ஆக்கிவிடமாட்டான். (யுகமுடிவு நாளின் நெருக்கத்தில்) ஷாம் நாட்டினர் ஒரு மனிதரின் தலைமையிலும், அவரின் குடும்பத்தின் தலைமையிலும் ஒன்றுப்படுவதை நீ கண்டால் கான்ஸ்டாண்டிநோபிள் வெற்றிக்கொள்ளப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸஅலபா (ரலி)

அறிவிப்பாளர் முஆவியா பின் ஸாலிஹ் அவர்கள், இந்த செய்தியை சிலநேரம் நபி (ஸல்) அவர்களின் சொல்லாகவும், சிலநேரம் அபூ ஸஅலபா (ரலி) அவர்களின் சொல்லாகவும் அறிவித்துள்ளார்.