«لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي عَلَى الْحَقِّ ظَاهِرِينَ عَلَى مَنْ يَغْزُوهُمْ، قَاهِرِينَ لَا يَضُرُّهُمْ مَنْ نَاوَأَهُمْ، حَتَّى يَأْتِيَهُمْ أَمَرُ اللهِ، وَهُمْ كَذَلِكَ» .
قِيلَ: يَا رَسُولَ اللهِ، وَأَيْنَ هُمْ؟ قَالَ: «بِبَيْتِ الْمَقْدِسِ»
7643. “எனது சமுதாயத்தில் ஒரு பிரிவினர் சத்தியத்திற்காக போராடிக் கொண்டே இருப்பார்கள்; தங்கள் எதிரிகளை அடக்கி வெல்பவர்களாக இருப்பார்கள்; அவர்களுக்கு இடைஞ்சல் செய்பவர்கள், அவர்களுக்குத் தீங்கிழைக்க முடியாது. இறுதியில், அவர்கள் அதே நிலையில் நீடித்திருக்க, அல்லாஹ்வின் ஆணை (இறுதி நாள்) அவர்களிடம் வரும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் எங்குள்ளனர்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் (ஜெருஸலமிலுள்ள) பைத்துல் மக்திஸில் உள்ளனர்” என்று பதிலளித்தார்கள்.