«لَيْسَ عَامٌ إِلَّا الَّذِي بَعْدَهُ شَرٌّ مِنْهُ، وَلَا عَامٌ خَيْرٌ مِنْ عَامٍ، وَلَا أُمَّةٌ خَيْرٌ مِنْ أُمَّةٍ، وَلَكِنْ ذَهَابُ خِيَارِكُمْ وَعُلَمَائِكُمْ، وَيُحَدِّثُ قَوْمٌ يَقِيسُونَ الْأُمُورَ بِرَأْيِهِمْ فَيَنْهَدِمُ الْإِسْلَامُ وَيَنْثَلِمُ»
8551. இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“உங்களிடம் ஒரு காலம் வந்தால், அதற்குப் பின்வரும் காலம் அதைவிட மோசமானதாகவே இருக்கும். (இதன் கருத்து) இந்த வருடம் (பின்வரும்) அந்த வருடத்தை விட சிறந்ததாக இருக்கும் என்பதல்ல. இந்த சமுதாயம் (பின்வரும்) அந்த சமுதாயத்தை விட சிறந்ததாக இருக்கும் என்பதல்ல.
மாறாக, உங்களில் உள்ள சிறந்தோரும், அறிஞர்களும் மேதைகளும் (இறந்து) போய்விட (அவர்களுக்கு பின்வரும்) கூட்டம் அவர்களின் சுயகருத்துக்களை அளவுகோலாக கொண்டே சட்டமெடுப்பார்கள். அதனால் இஸ்லாம் அழிந்து துண்டுதுண்டாகிவிடும் (என்பதே இதன் பொருளாகும்)
அறிவிப்பவர்: மஸ்ரூக் (ரஹ்)