🔗

almujam-assaghir-1024: 1024

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«إِنِّي لَا أَتَخَوَّفُ عَلَى أُمَّتِي مُؤْمِنًا وَلَا مُشْرِكًا , أَمَّا الْمُؤْمِنُ فَيَحْجِزُهُ إِيمَانُهُ , وَأَمَّا الْمُشْرِكُ فَيَقْمَعُهُ كُفْرُهُ , وَلَكِنْ أَتَخَوَّفُ عَلَيْكُمْ مُنَافِقًا عَالِمُ اللِّسَانِ يَقُولُ مَا تَعْرِفُونَ وَيَعْمَلُ مَا تُنْكِرُونَ»


1024. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தின் விஷயத்தில் இறைநம்பிக்கையாளர் பற்றியோ இணைவைப்பவர் பற்றியோ நான் பயப்படவில்லை. ஏனெனில் இறைநம்பிக்கையாளரின் இறைநம்பிக்கை அவரை (குழப்பம் செய்வதை விட்டு) தடுத்து விடும். இணைவைப்பவரின் நிராகரிப்பு அவரை வீழ்த்திவிடும்.

என்றாலும் நான் மிகவும் அஞ்சுவது, நாவன்மை மிக்க ஒவ்வொரு நயவஞ்சகர்களை பற்றித்தான். அவர்கள் (வெளிப்படையில்) நீங்கள் அறிந்த நல்ல விசயங்களைக் கூறுவார்கள். (அந்தரங்கத்தில்) நீங்கள் வெறுப்பவற்றை செய்வார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)