🔗

bazzar-2403: 2403

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«خَصْلَتَانِ لَا يُحْصِيهِمَا أَحَدٌ إِلَّا دَخَلَ الْجَنَّةَ، هُمَا يَسِيرٌ وَمَنْ يَعْمَلْ بِهِمَا قَلِيلٌ، يُسَبِّحُ الرَّجُلُ فِي دُبُرِ صَلَاتِهِ مِائَةَ تَسْبِيحَةٍ وَيُكَبِّرُ وَيُهَلِّلُ»


2403. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“இரண்டு நற்செயல்களை வழமையாக கடைப்பிடித்து வரும் எவரும் கண்டிப்பாக சுவர்க்கத்தில் நுழைவார். அவ்விரண்டு நற்செயல்களும் (கடைப்பிடித்துவர ) எளிதானவை தான். ஆனால் அதைக் கடைப்பிடிப்பவர்கள் குறைவானவர்களே!

அவை ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் ஸுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர் , லாஇலாஹ இல்லல்லாஹ் என்று 100 தடவை கூறுவதாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.