🔗

bazzar-2404: 2404

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

قِيلَ: وَكَيْفَ لَا يُحْصِيهَا يَا رَسُولَ اللَّهِ، قَالَ: ” يَأْتِي أَحَدَكُمُ الشَّيْطَانُ فَيَقُولُ لَهُ: اذْكُرْ حَاجَةَ كَذَا اذْكُرْ حَاجَةَ كَذَا حَتَّى يَنْصَرِفَ


2404. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதரே! இவ்விரண்டு நற்செயல்களை செய்வது எளிதாக இருந்தும், இதை அதிகமானோர் வழமையாக கடைப்பிடிக்க மாட்டார்கள் என்று எப்படி நீங்கள் கூறுகின்றீர்கள்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவரிடம் ஷைத்தான் வந்து, உனக்கு இன்னின்ன தேவைகள் உள்ளன அதை நினைத்துப்பார், இதை நினைத்துப்பார் என்று கூறுவான். எனவே அவர் தஸ்பீஹ்களை ஓதாமல் திரும்பிச் சென்று விடுவார்.