🔗

bazzar-2531: 2531

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

مَنْ قَالَ: اللَّهُمَّ إِنِّي أُشْهِدُكَ وَأُشْهِدُ مَلَائِكَتَكَ وَحَمَلَةَ عَرْشِكَ، وَأُشْهِدُ مَنْ فِي السَّمَاوَاتِ أَنَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ مَنْ قَالَهَا مَرَّةً أَعْتَقَ ثُلُثَهُ مِنَ النَّارِ، وَمَنْ قَالَهَا مَرَّتَيْنِ أَعْتَقَ ثُلُثَاهُ مِنَ النَّارِ، وَمَنْ قَالَهَا ثَلَاثًا أَعْتَقَ كُلَّهُ مِنَ النَّارِ


2531. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், அல்லாஹும்ம இன்னீ உஷ்ஹிதுக, வ உஷ்ஹிது மலாஇகதக, வ ஹமலத அர்ஷிக, வ உஷ்ஹிது மன் ஃபிஸ்ஸமாவாதி வமன் ஃபில்அர்ளி, அன்னக அன்தல்லாஹு லாயிலாஹ இல்லா அன்த, வஹ்தக, லா ஷரீக லக, வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துக வரஸூலுக

(பொருள்: அல்லாஹ்வே! நீயே அல்லாஹ். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை. நீ தனித்தவன். உனக்கு இணையாக எவருமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் உன்னுடைய அடியாரும், தூதரும் ஆவார் என்று நான் உறுதி கூறுகிறேன். இதற்கு உன்னையும், உன்னுடைய வானவர்களையும், உன் அர்ஷை சுமக்கும் வானவர்களையும், வானங்கள் மற்றும் பூமியில் இருப்போரையும் சாட்சியாக ஆக்குகின்றேன்.) 

என்று ஒரு தடவை ஒருவர் கூறினால் அவர் உடலின் மூன்றில் ஒரு பகுதியை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்கிறான். அவர் இரண்டு தடவை கூறினால் மூன்றில் இருபகுதியை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்கிறான். அவர் மூன்று தடவை கூறினால் அவரின் முழு உடலையும் நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்கிறான்.

அறிவிப்பவர்: ஸல்மான் அல்ஃபாரிஸீ (ரலி)