لَيْسَ مِنَّا مَنْ تَطَيَّرَ أَوْ تُطُيِّرَ لَهُ، أَوْ تَكَهَّنَ أَوْ تُكُهِّنَ لَهُ، أَوْ سَحَرَ أَوْ سُحِرَ لَهُ، وَمَنْ عَقَدَ عُقْدَةً – أَوْ قَالَ: مَنْ عَقَدَ عُقْدَةً – وَمَنْ أَتَى كَاهِنًا فَصَدَّقَهُ بِمَا يَقُولُ فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
3578. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பறவை சகுனம் பார்ப்பவனும், (தனக்காக) சகுனம் பார்க்க கூறியவனும், சோதிடம் பார்ப்பவனும், (தனக்காக) சோதிடம் பார்க்க கூறியவனும், சூனியம் செய்பவனும், (பிறருக்கு) சூனியம் செய்ய கூறியவனும் நம்மைச் சார்ந்தவனல்ல.
யார் கயிற்றில் முடிச்சிடுகிறானோ அவனும், குறிகாரனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை எனக் கருதுகிறானோ அவனும் இந்த முஹம்மது (ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்தை) நிராகரித்து விட்டனர்.
அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)