🔗

bazzar-4144: 4144

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

إِنَّكُمْ سَتُجَنِّدُونَ أَجْنَادًا، جُنْدًا بِالشَّامِ، وَمِصْرَ، وَالْعِرَاقِ، وَالْيَمَنِ، قَالُوا: فَخِرْ لَنَا يَا رَسولَ اللهِ. قَالَ: عَلَيْكُمْ بِالشَّامِ، قَالُوا: إِنَّا أَصْحَابُ مَاشِيَةٍ، ولاَ نُطِيقُ الشَّامَ، قَالَ: فَمَنْ لَمْ يُطِقِ الشَّامَ فَلْيَلْحَقْ بِيَمَنِهِ، فَإِنَّ اللَّهَ قَدْ تَكَفَّلَ لِي بِالشَّامِ.


4144. “நீங்கள் ஆயுதமேந்திய மாறுபட்ட பல படையினராக மாறும் நிலை (பிற்காலத்தில்) ஏற்படும். ஒரு படையினர் ஷாமில் இருப்பார்கள். மற்றொரு படையினர் எகிப்தில் இருப்பார்கள். மற்றொரு படையினர் ஈராக்கில் இருப்பார்கள். மற்றொரு படையினர் யமன் நாட்டில் இருப்பார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எந்தப் படையில் இருக்கவேண்டும் என்று எங்களுக்கு தேர்வுசெய்யுங்கள் என்று கூறினர்.

அதற்கு, “ஷாம் நாட்டுடன் சேர்ந்துக் கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபித்தோழர்கள் நாங்கள் கால்நடைகளையே வைத்துள்ளோம்…நாங்கள் கால்நடையாக செல்பவர்கள். ஷாமுக்கு செல்லும் அளவுக்கு எங்களிடம் பலமில்லை என்று கூறினர்.

ஷாமுக்கு செல்லமுடியாதவர், யமன் நாட்டின் படையுடன் சேர்ந்துக் கொள்ளட்டும். திண்ணாக அல்லாஹ், எனக்காக ஷாமுக்கு பொறுப்பேற்றுக் கொண்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)

பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் அபுத்தர்தா (ரலி)  வழியாக வரும் செய்தியே மிக அழகானது என்றே நாம் அறிகிறோம். அபுத்தர்தா (ரலி) அல்லாத மற்ற நபித்தோழர்கள் வழியாகவும் இந்த செய்தி வந்துள்ளது.

அபுத்தர்தா (ரலி) வழியாக வரும் செய்தியே சரியானதாக; அழகானதாக இருப்பதால் அதையே நாம் பதிவு இங்கு செய்துள்ளோம்.