🔗

bazzar-5055: 5055

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

لَمَّا كَانَ يَوْمُ الْخَمِيسِ وَمَا يَوْمُ الْخَمِيسِ، ثُمَّ بَكَى ابْنُ عَبَّاسٍ فِي مَرَضِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي قُبِضَ فِيهِ قَالَ: ائْتُونِي بِصَحِيفَةٍ وَدَوَاةٍ حَتَّى أَكْتُبَ لَكُمْ كِتَابًا لا تَضِلُّوا بَعْدَهُ أَبَدًا.


5055. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அன்று) வியாழக்கிழமை, எந்த வியாழக்கிழமை (தெரியுமா?)’ என்று கேட்டுவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயின் போது மரணித்தார்களோ அந்த நோய் ஏற்பட்டபோது, “என்னிடம் ஒரு ஏடும் மையும் கொண்டு வாருங்கள்! அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறாதவாறு உங்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதிக் கொடுக்கிறேன்” (என்று கூறினார்கள்).


பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக இந்தச் செய்தி வேறு சரியான அறிவிப்பாளர்கள்தொடர்கள் வழியாக வந்துள்ளன. இதில் அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ் அவர்கள் ஒரு சொல்லை அதிகமாகச் சேர்த்துள்ளார். அது நிராகரிக்கப்படுகிறது. எனவே, அந்தச் சொல்லை முன்னிட்டு இந்த ஹதீஸ் பலவீனமானதாகி விட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கண்ணியம் கருதி நாம் அந்தக் குறிப்பான சொல்லைக் குறிப்பிடவில்லை.

அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ் அவர்கள் கூஃபாவில் வாழ்ந்தார். மேலும் ‘ரய்’ நகரத்தின் நீதிபதியாகவும் இருந்தார். இவர் இப்னு அப்பாஸ் (ரலி) போன்றோர் வழியாக மற்றவர்கள் அறிவிக்காத சில செய்திகளை அறிவித்துள்ளார். எனவே இதன் காரணமாக இவர் பலமானவர் அல்ல.