🔗

bazzar-5853: 5853

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

أَن النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم قَرَأَ سُورَةَ الرَّحْمَنِ عَلَى أَصْحَابِهِ، فَسَكَتُوا، فَقَالَ: لقد كان الجن أحسن ردًا منكم، كلما قرأتُ عليهم: {فبأي آلاء ربكما تكذبان} ، قَالُوا: لا بِشَيْءٍ مِنْ آلائِكَ رَبَّنَا نكذبُ، فَلَكَ الْحَمْدُ.


5853. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் (அல்குர்ஆன்: 55:1-78) எனும் அர்ரஹ்மான் அத்தியாயத்தை ஓதிக் காட்டினார்கள். அப்போது அவர்கள் அமைதியாக இருந்தனர். உடனே, நபி (ஸல்) அவர்கள், “ஜின்கள் உங்களை விடச் சிறப்பாகப் பதிலளித்தார்கள்.

நான் அவர்களிடம், “உங்கள் இருவரின் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்யாக்குவீர்கள்?” என்ற வசனத்தை ஓதியபோதெல்லாம், “எங்களின் இரட்சகனே! உனது அருட்கொடைகளில் எதையும் நாங்கள் பொய்யாக்கவில்லை. உனக்கே புகழ் அனைத்தும்” என்று பதிலளித்தார்கள்” எனக் கூறினார்கள்.


பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸ் நபி (ஸல்) அவர்களிடமிருந்து இந்த அறிவிப்பாளர்தொடர் வழியாக மட்டுமே வந்துள்ளதாக நாம் அறிகிறோம்.