🔗

bazzar-6178: 6178

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

دَخَلَ عَلَى النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم نسوة من الأنصار فقال: يانساء الأنصار اختضبن خمسا

وَاخْفِضْنَ، ولاَ تُنْهِكْنَ فَإِنَّهُ أَحْظَى عِنْدَ أَزْوَاجِكُنَّ وَإِيَّاكُنْ وَكُفْرَ الْمُنَعَّمِينَ

قَالَ مَنْدَلٌ: يَعْنِي الأَزْوَاجَ.


6178. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், (ஒரு தடவை) அன்ஸாரி நபித்தோழியரிடம் வந்தார்கள். அப்போது அவர்களிடம், “அன்ஸாரி பெண்களே! நீங்கள் உருவமில்லாத (வடிவத்தில்) மருதாணி வையுங்கள்;

(பெண்களுக்கு கத்னா எனும் விருத்தசேதனம் செய்யும்போது) மேலோட்டமாக நறுக்குங்கள்! ஒட்ட நறுக்கி விடாதீர்கள்! இதுவே உங்கள் கணவருக்கு பிடித்தமானது;

உபகாரம் செய்வோருக்கு நன்றிமறப்பதை விட்டு உங்களை எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: நாஃபிஉ (ரஹ்)

மின்தல் என்பவர், “உபகாரம் செய்வோர்” என்பதின் கருத்து “கணவர்கள்” என்று விளக்கம் கூறினார்.

பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

இதுவே இப்னு உமர் (ரலி) அவர்களின் வழியாக வரும் செய்திகளில் (நான் தொகுத்த வரிசையின்படி) கடைசி செய்தியாகும்.