🔗

bazzar-6435: 6435

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

مَنْ قَالَ: بِاسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لَا حَوْلَ، ولاَ قُوَّةَ إلاَّ بِاللَّهِ قِيلَ: حَسْبُكَ وُقِيتَ وَكُفِيتَ وَتَبَاعَدَ عَنْكَ الشَّيْطَانُ.


6435. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தனது வீட்டை விட்டு வெளியேறும் போது, “பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி, லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்…

(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் வெளியேறுகிறேன். அவனையே நான் சார்ந்துள்ளேன். அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் இயலாது)

என்று கூறினால், “இதுவே உனக்கு போதும்! நீ பாதுகாக்கப்பட்டாய்!பொறுப்பேற்கப்பட்டாய்! உன்னை விட்டு ஷைத்தான் வெகுதூரத்தில் சென்று விட்டான் என்று அவருக்கு கூறப்படும்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)