لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم رَجُلا أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ وَامْرَأَةً بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ وَرَجُلا سَمِعَ حَيَّ عَلَى الْفَلاحِ فَلَمْ يُجِبْ.
பாடம்:
ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களிடமிருந்து ஃபள்ல் பின் தல்ஹம் என்பவரின் அறிவிப்புகள்.
6707. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்கள் ஒருவரை வெறுத்தும் அவர்களுக்கு தொழுகை நடத்துபவரையும்; கணவன் கோபமான நிலையில் இரவைக் கழிக்கும் பெண்ணையும்; (பாங்கு கூறும்போது) ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியை நோக்கி வாருங்கள்) என்பதை செவியேற்றும் அதற்கு பதிலளிக்காதவரையும் சபித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:
இந்த செய்தியை ஹஸன் பஸரீ —> அனஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் ஃபள்ல் பின் தல்ஹம் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார் என்று அறிகிறோம். இவர் ஹாஃபிள்.. அல்ல. இவர் பஸராவைச் சேர்ந்தவர்; பிரபலமானவர். இந்த செய்தியை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து இவர் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார்.