🔗

bazzar-9273: 9273

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

الصلاة ثلاثة أثلاث الطهور ثلث والركوع ثلث والسجود ثلث فمن أداها بحقها قبلت منه وقبل منه سائر عمله ومن ردت عليه صلاته رد عليه سائر عمله.


9273. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகை மூன்று பாகங்களைக் கொண்டது. அதன் ஒரு பாகம் (தொழுவதற்கு முன் உளூ எனும்) தூய்மைச் செய்தல். மற்றொரு பாகம் ருகூஉ செய்தல், மற்றொரு பாகம் ஸஜ்தா செய்தல் ஆகியவை ஆகும்.

யார் தன் தொழுகையை அதன் முறைப்படி நிறைவேற்றுகிறாரோ, அவரது தொழுகையும், அத்துடன் அவரது மற்ற எல்லா அமல்களும் ஏற்றுக் கொள்ளப்படும். யார் தன் தொழுகையை நிறைவேற்றுவதில் குறை வைக்கிறாரோ, அவரின் தொழுகை நிராகரிக்கப்படும். அத்துடன் அவரது மற்ற அமல்களும் நிராகரிக்கப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸ் அஃமஷ் —> அபூஸாலிஹ் —> கஅபுல் அஹ்பார் என்ற அறிவிப்பாளர்தொடரில் கஅபுல் அஹ்பார் அவர்களின் சொல்லாக வந்துள்ளதே மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தியாகும்.

அபூஸாலிஹ் —> அபூஹுரைரா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபியின் சொல்லாக முஃகீரா பின் முஸ்லிம் என்பவர் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார். இவரைப் போன்று வேறு யாரும் அறிவிக்கவில்லை என்றே நாம் அறிகிறோம்.