قال ما من أصحاب نبي الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أحفظ لحديثه مني خلا عبد الله بن عمرو فإنه كان يعي بقلبه ويكتب بيده وكنت أنا أعي بقلبي.
9368. நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் எவரும் என்னை விட அதிகமான ஹதீஸ்களை மனப்பாடம் செய்யவில்லை; அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களைத் தவிர. காரணம் அவர் (ஹதீஸ்களை) மனனமிட்டுக்கொள்வார்; கையால் எழுதியும் வைத்துக் கொள்வார். நான் நினைவில் வைத்துக்கொள்வேன். (எழுதி வைத்ததில்லை) என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஜாஹித் (ரஹ்)