سَمِعْتُ عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى المِنْبَرِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا، أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ»
بسم الله الرحمن الرحيم
அளவிலா அருளாளன், நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அத்தியாயம்: 1
இறைச் செய்தி (வஹீ)யின் ஆரம்பம்.
முன்னோடி அறிஞரும், நபிமொழி மேதையுமான அபூஅப்துல்லாஹ்-முஹம்மத் பின் இஸ்மாயீல் பின் இப்ராஹீம் பின் முஃகீரா அல்புகாரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
பாடம்: 1
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (வஹீ எனும்) வேத அறிவிப்பு எவ்வாறு துவங்கிற்று? என்பதும், புகழோங்கிய அல்லாஹ் கூறும், (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின்னர் வந்த நபிமார்களுக்கும் நாம் இறைச் செய்தி (வஹீ) அருளியதைப் போன்றே உமக்கும் நாம் இறைச் செய்தி (வஹீ) அருளினோம் எனும் (அல்குர்ஆன்: 4:163) இறைவசனமும்.
1 . செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது.
ஒருவரின் ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை மணக்கும் நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார்.
எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றேன் என்று உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி அறிவித்ததை நான் செவியேற்றேன்.
அறிவிப்பவர்: அல்கமா பின் வக்காஸ் அல்லைஸிய்யீ (ரஹ்)
அத்தியாயம்: 1